உணவைப் பற்றி நம் வள்ளுவன்...
சங்ககால தமிழ் இலக்கியங்களான எட்டுத்தொகை,பத்துப்பாட்டு,
மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று.
என்று ஆரம்பிக்கும் நம் வள்ளுவர் தனது 94ஆம் அதிகாரத்தில், பெரும்பாலான நோய்களுக்கு மூல காரணமாக அமைவதே உணவு தான் என்று உரைக்கின்றார்.
(ø) நாம் உண்ணும் உணவு தூய்மையானதாக இருத்தல் வேண்டும்.
(ø) உணவு தூய்மையானதாக இருப்பினும் அவ்வுணவை அவரவர் உடல் தேவைக்கேற்ப உண்ணல் வேண்டும்.
(ø) உணவைச் சுவைக்காக உண்ணுதல் கூடாது.
(ø) பசிக்கின்றதே என கிடைக்கின்ற தூய்மையற்ற உணவையும் உண்ணுதல் கூடாது.
(ø) உடல் நலத்திற்கேற்ற உணவை உண்ணல் வேண்டும்.
(ø) சுவையுடன் இருக்கின்றது என்பதற்காக உணவை அளவிற்கு அதிகமாக உண்ணுவதும் நோயைத் தரும்.
(ø) முன்பு உண்ட உணவு முழுமையும் செரிமானம் ஆகிய பின்னர் உணவினை உண்ணுதல் வேண்டும். இல்லையேல் முன்னர் உண்ட உணவு விஷமாக மாறும்.
நோய் வருமுன் காப்பதற்கு நாம் உண்ணும் உணவே சிறந்த வழி என்று நமக்கு தெளிவூட்டுகிறான்.
நன்றி
ழகரம்
#LAGARAM
Lagaram
True and Beautiful..!
ReplyDelete